நடிகராக மட்டுமின்றி, இயக்குனராகவும் அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து வந்தவர் தனுஷ். இவர் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான பா.பாண்டி, ராயன் ஆகிய படங்கள் வெற்றிபெற்ற நிலையில், மூன்றாவது படமாக, சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து, 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தை இயக்கினார். கடந்த மாதம் ரிலீஸ் ஆன இந்த படம், அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
எதார்த்தமான காதல் கதையில் உருவாகி இருந்த, இந்த திரைப்படம், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட போதும் போட்ட தொகையைக் கூட வசூலிக்காமல், திரையரங்கில் வாஷ் அவுட் ஆனது. ஆனால் இந்த படத்துக்கு போட்டியாக ரிலீசான 'டிராகன்' தற்போது ரூ.150 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது.
இட்லி கடை படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள்:
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது தனுஷ் தன்னுடைய நான்காவது படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார் Dhanush Directorial Film Update( Dhanush Directorial Film Update). தனுஷின் 52-ஆவது படமாக உருவாகும் இந்த படத்திற்கு 'இட்லி கடை' என பெயரிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் 'டான் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரித்துள்ளார். தனுசுக்கு ஜோடியாக 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் நடித்த நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்க, அருண் விஜய், ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, ராஜ்கிரன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது.
ஒரே நாளில் மோதிக் கொள்ளும் தனுஷ், சிவகார்த்திகேயன்; இட்லி கடை, மதராஸி ரிலிஸ் எப்போது?
ஜிவி பிரகாஷ் இசையில் இட்லி கடை
ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு செய்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிப்புகள் வெளியானது.
இட்லி கடை தள்ளி போக குட் பேட் அக்லீ காரணமா?
ஆனால் அஜித்தின் 'குட் பேட் அக்லீ' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால், தனுஷின் 'இட்லி கடை' அஜித்துடன் மோத வாய்ப்பில்லை என நெட்டிசன்கள் கூறி வந்தனர். அதற்கு ஏற்ற போல், படக்குழு தரப்பில் இருந்தும் 'இட்லி கடை' திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியான (Idli Kadai' Release Delayed). எனவே ' இட்லி கடை' ரிலீஸ் தள்ளி போவதற்கு அஜித்தின் படம் தான் காரணம் என சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவிய நிலையில், இதற்கு தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர் அஜித்தால் தனுஷின் இட்லி கடைக்கு வந்த சிக்கல்!
ஆகாஷ் பாஸ்கரன் கூறிய தகவல்:
இதுகுறித்து அவர் பேசும் போது, சில நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், 90% சதவீத படபிடிப்புகள் முடிந்து விட்டது. படம் நன்றாக வந்துள்ளது. எனவே அவசரப்பட வேண்டாம் என இந்த படத்தின் ரிலீஸை தற்போது தாமதப்படுத்தி உள்ளோம். இன்னும் பத்து நாட்களில் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.