ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி முடித்த தனுஷ், தற்போது தான் இயக்கும் நான்காவது படத்திற்கான வேலைகளையும் தொடங்கி இருக்கிறார். அவர் இயக்கும் 4-வது படத்தில் நித்யா மேனன் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்கு முன்னர் அவர் தனுஷுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்காக நடிகை நித்யா மேனனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.