சுவற்றில் ரத்தங்கள் கோடுகள் போட்டது போல் இருக்க, தனுஷ் சட்டை போடாமல் பாறைகள் மேல் நின்று கொண்டிருப்பது இந்த போஸ்டரில் உள்ளது. இந்த போஸ்டரே படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. தனுஷே எழுதி, இயக்கி, நடிக்கும் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வபோது சமூக வலைதளத்தில் வெளியாகி வந்த நிலையில் தற்போது, படக்குழுவே படப்பிடிப்பு துவங்கியுள்ள தகவலை உறுதி செய்துள்ளது.