இதையடுத்து 2-வது திருமணம் குறித்து பதிவிட்டிருந்த இமான், கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பம் சந்தித்து வந்த இன்னல்களுக்கு தீர்வு காணும் விதமாக தனது மறுமணம் அமைந்ததாகவும், எமிலியின் மகள் நேத்ராவை தனது மூன்றாவது மகளாக ஏற்றுக்கொள்வதாகவும், அதே வேளையில் தனது மகள்களை மிஸ் பண்ணுவதாகவும், அவர்களுக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் உருக்கமாக பதிவிட்டிருந்தார். மேலும் எமிலியின் பெரிய குடும்பத்தில் தன்னை சேர்த்துக்கொண்டதற்காக நன்றியும் தெரிவித்திருந்தார்.