முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு...சர்ச்சையில் சிக்கிய டி.இமான்!

First Published May 17, 2022, 6:59 PM IST

 முன்னாள் மனைவி மோனிகா குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டு புது பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து வாங்கி இருக்கிறார் என புகார் சொல்லி இருந்தார்.

d imman

பிலிம்பேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ,விஜய் விருதுகள் , எடிசன் விருது, ஆனந்த விகடன் சினிமா விருது மற்றும் ஜீ தமிழ் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர் பிரபல இசையமைப்பாளர் டி.இமான். .அதோடு  சிறந்த இசை அமைப்பாளராக தேசிய திரைப்பட விருதை வென்ற ஐந்தாவது தமிழ் இசையமைப்பாளர்இவர் தான்.

D Imman

சமீபத்தில் வெளியான அண்ணாத்த, எதிராக துணிந்தவன் உள்ளிட்ட படங்களின்  மூலம் மாஸ் காட்டி இருந்தார். இவர் கன்னடம், மலையாளம் , தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படத் துறையில் கலக்கும் இமான் கடந்த 2002 இல் தமிழன் படம் மூலம்  இசையமைப்பாளராக அறிமுகமான  இவர் சுமார் 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். 

D imman family

இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான டி. இமான் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்தது குறித்து  ட்வீட்டில் பதிவிட்டிருந்தார். அதில் ..'எனது நலம் விரும்பிகள் மற்றும் தீவிர இசை ஆர்வலர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்ததற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எங்களின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகளில் செல்லவே, மோனிகா ரிச்சர்டும் நானும் நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து, இனி கணவன் மனைவியாக இருக்க முடியாது என்று முடிவெடுத்தோம். என அறிவித்தார்..

d imman

இந்நிலையில் நேற்று இசையமைப்பாளர் டி .இமானுக்கு திருமணம் முடிந்து விட்டதாக ஒரு புகைப்படம் உலா வந்தது. அதில் இமான் மணமகன் கோலத்தில் புது மனைவியுடன் இருந்தார். அருகில் சங்கிதா-கிரீஸ் தம்பதிகள்,  குட்டி பத்மினி உள்ளிட்டோர் வாழ்த்து கூறும் காட்சிகள் இருந்தன.  

D imman family

இந்நிலையில் முன்னாள் மனைவி மீது இமான் பொய் புகார் கூறியதாக மோனிகாவின் தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதாவது தனது குழந்தைகளை வெளிநாடு அனுப்புவதற்காக பாஸ்போர்ட் தொலைந்து போனதாக பொய் கூறி புது பாஸ்போர்ட் வாங்கியுள்ளதாக இமான் தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மோனிகா, டி. இமான் பாஸ்போர்ட் தொலைந்து போனதாக கூறி பாஸ்போர்ட் கொடுக்க மறுத்த காரணத்தால் தான் புது பாஸ்போர்ட்டுக்கு பதிவு செய்ததாவும், குழந்தை கஸ்டடி உரிமையை வைத்திருக்கும்  தனக்கே அந்த உரிமையுள்ளதாகவும் கூறியுள்ளார். அதோடு இமான் முன்னாள் மனைவிக்கு எந்தவித ஜீவனாம்சம் கொடுக்கவில்லையாம். பிள்ளைகளின் செலவுக்கு மட்டும் ரூ. 5000 தருவதாகவும் புகார் எழுந்துள்ளது.  

click me!