பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து, பின் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இவர் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வெற்றி பெற்ற நிலையில்.. இந்த திரைப்படம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'மௌன ராகம்' படத்தின் கதையை திருடி எடுக்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. மேலும் பலர் அப்போது எடுக்கப்பட்ட 'மௌன ராகம்' படத்தின் கதையை தற்போதைய காலத்திற்கு ஏற்ற போல் அட்லீ இயக்கியுள்ளார் என தெரிவித்தனர்.