இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள், கொள்ளை சம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் வீட்டில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் வீட்டில் பணியாற்றிய நேபாளத்தை சேர்ந்த வாட்ச்மேனும் அவரது நண்பர்களும் சேர்ந்து திருடியது தெரியவந்தது.
இதன்பின்னர் நடிகர் ஆர்.கே. நந்தம்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளையர்களை வலைவீசி தேடி வரும் போலீசார், அவர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு அவர்களது புகைப்படங்களை அனுப்பி தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தை தட்டிதூக்கிய ரெட் ஜெயண்ட்... காத்துவாக்குல ரிலீஸ் தேதியை கசியவிட்ட உதயநிதி