பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
கல்கி எழுதிய நாவலுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ அதைவிட டபுள் மடங்கு வரவேற்பு பொன்னியின் செல்வன் படத்துக்கு கிடைத்திருந்தது. ரிலீசாகி 25 நாட்களைக் கடந்து வெற்றிநடைபோட்டு வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... யாராவது தன்னை பற்றியே அசிங்கமா பேச சொல்லுவாங்களா? சதீஷின் விளக்கத்தை பார்த்து கடுப்பான தர்ஷா குப்தா!