இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளெல்லாம் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரஜினியின் பிறந்தநாள் அன்று இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று இப்படம் குறித்த எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது இப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது.