நயன்தாரா குழந்தை பெற்றது முதல்... தனுஷ் விவாகரத்து வரை..! 2022 ஆம் ஆண்டு சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்!

First Published Dec 20, 2022, 11:39 PM IST

இன்னும் சில தினங்களில், 2022 ஆம் ஆண்டிற்கு நாம் குட் பை சொல்ல உள்ள நிலையில்... 2022 ஆம் ஆண்டு மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகை தாய் விவகாரம்:

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அளவுக்கு உயர்ந்துள்ள நயன்தாரா, இந்த ஆண்டு ஜூன் மாதம் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் ஆன 4 மாதத்திலேயே தாங்கள் பெற்றோர் ஆகிவிட்டதாக இவர்கள் போட்ட பதிவு, பரபரப்பை ஏற்படுத்தியது.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டதாக இவர்கள் கூறிய விஷயம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்க்கு காரணம், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால், சில விதிமுறைகள் உள்ளது. அந்த விதிமுறைகளை நயன்தாரா - விக்னேஷ் சிவன் மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அரசு சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து, அறிக்கை தாக்கல் செய்த விசாரணை குழு... நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி எவ்வித விதி மீறலிலும் ஈடுபடவில்லை. இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் நடந்து விட்டதாகவும், முறையான அனுமதியோடு தான் குழந்தை பெற்றுக்கொண்டதாக கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

கந்தாரா பட பாடல் சர்ச்சை:

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னட திரைப்படம் 'கந்தாரா'. தமிழ் உட்பட பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற 'வராக ரூபம்' பாடல், தங்களுடைய மியூசிக்கை காப்பி அடித்து எடுக்கப்பட்டதாக, தாய்க்குடம் பிரிட்ஜ் என்கிற மியூசிக் பேண்ட் போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் இந்த படத்தில் இடம்பெற்ற மியூசிக் மாற்ற பட்ட பின்னர், இதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மீண்டும் இந்த பாடலை தற்போது மீண்டும் ஓடிடியில் வெளியான 'கந்தாரா' படத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

லைகர் பட பிரச்சனை:

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடைசியாக வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்த திரைப்படம் லைகர். பாக்சிங் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை எடுப்பதற்கு  பல அரசியல்வாதிகள் தங்களுடைய கறுப்புப் பணத்தை முதலீடு செய்து வெள்ளையாக மாற்ற முயற்சி செய்வதாக அரசியல்வாதி பக்கா ஜூட்சன் என்பவர்  அமலாக்க இயக்குநரகத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த புகார் தொடர்பாக, நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் தயாரிப்பாளர் சார்மி கவுர் உள்ளிட்ட பலரிடம் அதிகாரிகளால் பல மணி நேரம் விசாரணை செய்தனர். ED உடனான சந்திப்பிற்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா ஊடகங்களிடம் கூறியது, "ED அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன். அவர்கள் தங்கள் வேலையைச் செய்துள்ளனர். மீண்டும் அவர்கள் என்னை விசாரணைக்கு வர சொல்லவில்லை என தெரிவித்தார்.
 

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து:

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டு, 18 வருடங்கள் ஆன பின்னர் திடீர் என விவாகரத்து குறித்து அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, "18 வருடங்கள் நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், பெற்றோர்களாகவும் மற்றும் நலம் விரும்பிகளாகவும் ஒன்றாக வாழ்ந்தோம். நாங்கள் எங்கள் பாதைகளை தேர்வு செய்து பயணிக்கும் இடத்தில் இருக்கிறோம். எனவே இருவரும் ஒருமணத்தோடு பிரிய முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த விஷயம் தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டது. எனினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரை இது குறித்து எவ்வித அதிகார பூர்வ தகவல்களும் வெளியாக வில்லை.

click me!