இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இப்படம் தற்போது உயிர்பெற்றுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்க இயக்குனர் கவுதம் மேனன் தயாராகி உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் விக்ரம் உடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரமே எஞ்சி உள்ளதாக கூறப்படுகிறது.