நடிகர் விஜய் விரைவில் அரசியலில் நுழைய உள்ளதால், தன்னுடைய மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் லியோ பட ஷூட்டிங் முடிந்த கையோடு கடந்த மாதம் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூரில் ஆலோசனை மேற்கொண்ட விஜய், அதன்பின் ஓய்வுக்காக வெளிநாடு கிளம்பி சென்றுவிட்டார். தற்போது விஜய் வெளிநாட்டில் உள்ள நிலையில், விஜய் மக்கள் இயக்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.