நடிகர் விஜய் விரைவில் அரசியலில் நுழைய உள்ளதால், தன்னுடைய மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் லியோ பட ஷூட்டிங் முடிந்த கையோடு கடந்த மாதம் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூரில் ஆலோசனை மேற்கொண்ட விஜய், அதன்பின் ஓய்வுக்காக வெளிநாடு கிளம்பி சென்றுவிட்டார். தற்போது விஜய் வெளிநாட்டில் உள்ள நிலையில், விஜய் மக்கள் இயக்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
24
Vijay, bussy anand
அதன்படி வருகிற ஆகஸ்ட் 5 மற்றும் 6ந் தேதி புதிதாக தொடங்கப்பட்டுள்ள விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாம். நடிகர் விஜய் வெளிநாட்டில் இருப்பதால் இந்த கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து அவர்களுடன் மட்டுமே ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தற்போது முதன்முறையாக வழக்கறிஞர் பிரிவினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது சில முக்கிய விஷயங்கள் பற்றி விவாதிக்க புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் அறிவுறுத்தி உள்ளாராம்.
44
vijay
விஜய் மக்கள் இயக்கம் சட்ட ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி காலை 10 மணிக்கு பனையூரில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.