லட்டு விவகாரம்.. நமக்கு எதுக்கு வம்புன்னு பம்மிட்டாரோ? "நக்கல் மன்னனையே" வம்பிழுக்கும் மாறன்!

Ansgar R |  
Published : Sep 27, 2024, 09:00 PM IST

Blue Sattai Maran : திருப்பதி லட்டு விவகாரத்தில் பிரபல நடிகர் சத்யராஜை தொடர்ச்சியாக வசைபாடி வருகின்றார் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.

PREV
14
லட்டு விவகாரம்.. நமக்கு எதுக்கு வம்புன்னு பம்மிட்டாரோ? "நக்கல் மன்னனையே" வம்பிழுக்கும் மாறன்!
Blue Sattai Maran

திருப்பதி விவகாரம் 

சில தினங்களுக்கு முன்பு இந்தியாவையே அதிரவைக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் மற்றும் கடவுளுக்கு வழங்கப்படும் பிரசாதமான லட்டுவில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மீனின் எண்ணெய் அதில் கலக்கப்படுவதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானது. நாடு முழுவதும் இந்த தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

உடனே இந்த விவகாரத்தில் முன்னாள் ஆந்திர ஜெகன் மோகன் ரெட்டி மீது தான் தவறு உள்ளதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரா பாபு நாயுடு குற்றம் சாட்டினார். அதை தொடர்ந்து அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இனி இதுபோன்ற விஷயங்கள் நடைபெறாமல் இருக்க தனி வாரியம் ஒன்று அமைக்கப்பட்டு சனாதன தர்மம் காக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். கடந்த சில நாள்களாகவே இந்த விவகாரம் உக்ரம் குறையாமல் இருந்து வருகின்றது.

இந்த மனசு தான் சார் கடவுள்! இந்தியா திரும்பியதும் ஓடி போய் வயநாடு மக்களுக்கு உதவிய நடிகர் விஜய் விஷ்வா!

24
Pawan Kalyan

சிக்கலில் சிக்கிய கார்த்தி 

நடிகர் கார்த்தியின் மெய்யழகன் படம் இப்பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. ஆனால் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஹைதராபாத்தில் நடந்தபோது ஒரு சர்ச்சை வெடித்தது. நடிகர் கார்த்தி பங்கேற்க தனது மெய்யழகன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், தொகுப்பாளர் "லட்டு வேணுமா சார்" என்று கேட்க, அய்யயோ ஆந்திராவில் லட்டு பற்றி பேசக்கூடாது.. அது ரொம்ப சென்சிட்டிவான விஷயம் என்று கொஞ்சம் சிரித்துக்கொண்டே பேசினார். 

இந்த விஷயம் பவன் கல்யாண் கவனத்திற்கு செல்ல, நடிகர்கள் பொதுவெளியில் கவனமாக பேசவேண்டும், சனாதனம் பற்றிய விஷயங்களை பற்றி பேசும்போது, 100 முறை நன்கு யோசித்து பேசவேண்டும்" என்று கொஞ்சம் காட்டமாகவே கூறினார். அவருடைய அந்த பதிலுக்கு உடனே பதில் கொடுத்த கார்த்தி, நடந்த விஷயத்திற்காக வருந்துவதாக தெரிவித்தார். இந்த சூழலில் தான், கார்த்திக்கு நன்றி கூறி அவருடைய மெய்யழகன் படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் பவன் கல்யாண்.

34
Meiyazhagan

கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்

நடிகர் கார்த்தி திருப்பதி விவகாரத்தில் மன்னிப்பு கேட்டது ரொம்ப தப்பு என்று தனது கருத்தை பதிவு செய்தார் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். அதாவது இதே விவகாரத்தில் கேப்டன் விஜயகாந்த் ஈடுபட்டிருந்தால், நிச்சயம் அவர் மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார். ஆனால் கார்த்தி, தனது திரைப்படம் ஆந்திராவில் ஓடிட வேண்டும் என்பதற்காகவே மன்னிப்பு கேட்டுள்ளார். இதேபோல தான் காவேரி விவகாரத்தில் சத்யராஜும் மன்னிப்பு கேட்டார். 

அப்போது அவருடைய பாகுபலி படம் வெளியாகவிருந்ததால் தான் அவர் மன்னிப்பு கேட்டார் என்று கூறினார் ப்ளூ சட்டை மாறன். தமிழகத்தில் நடிகர்கள், தங்களுடைய படம் பிற மாநிலங்களில் ஓட வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட சூழல் வரும்போது நம்ம தலைவர் போல "எனக்கு தெரியாதுன்னு" சொல்லி பழகவேண்டும் என்று கூறி ரஜினியையும் கலாய்த்தார் மாறன்.

44
Sathyaraj

நக்கல் மன்னனை கலாய்க்கும் மாறன் 

தொடர்ச்சியாக பல முக்கிய நடிகர்களை வசைபாடி வரும் ப்ளூ சட்டை மாறன், இன்று வெளியிட்ட பதிவு ஒன்றில் மீண்டும் பிரபல நடிகர் சத்யராஜை கலாய்த்து பேசியுள்ளார். அதில்.. முன்பெல்லாம், தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தம்கட்டி சவுண்டு எல்லாம் விடுவீங்க. அதிரடியாக நாத்திகம் பேசுவீங்க. ஆனா இப்பொது ரொம்ப சைலன்ட் ஆகிட்டிங்க? லட்டு பத்தி கருத்து சொல்லலையா? இப்போ பான் இந்தியா நடிகர் குறிப்பாக தெலுங்கில் நல்ல மவுசு உள்ளதால் கருத்து சொல்லவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்த்தியால் சென்னைக்கு குட் பை சொல்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் நடக்கும் தடபுடலான ஏற்பாடு - Viral Video!

Read more Photos on
click me!

Recommended Stories