இந்நிலையில், இந்த சம்பவத்தை வெளிப்படையாக சொன்னதற்காக தான் வெட்கப்படவில்லை என நடிகை குஷ்பு கூறி உள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது : “நான் ஒன்றும் திடுக்கென ஒரு அறிக்கையை வெளியிடவில்லையே. நேர்மையாக தான் நடந்ததை சொன்னேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. ஏனெனில் எனக்கு நடந்ததை கூறினேன். குற்றம் செய்தவர் தான் வெட்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.