ஹோம்லி லுக்கில் இருந்து கவர்ச்சிக்கு தாவிய சீரியல் நடிகை ஜனனி... படுக்கையறையில் நடத்திய படுகிளாமர் போட்டோஷூட்

First Published Mar 8, 2023, 11:53 AM IST

பெரும்பாலும் ஹோம்லி லுக்கில் போட்டோஷூட் நடத்தும் ஜனனி தற்போது திடீரென படுகிளாமராக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

சினிமா நடிகைகளுக்கு நிகராக தற்போது சீரியல் நடிகைகளும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் சோசியல் மீடியா தான். அதில் புகைப்படங்களை பதிவிட்டு தங்களது ரசிகர்கள் வட்டத்தை நடிகை பெரிதாக்கி வருகின்றனர்.

சோசியல் மீடியா மூலம் பாபுலர் ஆன சீரியல் நடிகைகளில் நடிகை ஜனனி அசோக் குமாரும் ஒருவர். கோயம்புத்தூரை சேர்ந்த ஜனனி, முதன்முதலில் நடித்தது நண்பேண்டா என்கிற திரைப்படத்தில் தான். இப்படத்தில் நயன்தாராவுடன் சிறிய கேரக்டரில் நடித்தார் ஜனனி.

இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த ஏமாளி என்கிற படத்திலும் நடித்தார். தொடர்ந்து சின்ன கேரக்டரே கிடைத்து வந்ததால் இது செட் ஆகாது என முடிவெடுத்து சின்னத்திரை சீரியலில் நடிக்கத் தொடங்கினார் ஜனனி.

இதையும் படியுங்கள்.. பெண்கள் தொட்டதில் வெல்லாத செயலே இல்லை - மகளிர் தின வாழ்த்து சொல்லி கமல் போட்ட நச் பதிவு வைரல்

அந்த வகையில் அவர் நடித்த முதல் தொடர் மாப்பிள்ளை. இதையடுத்து மெளன ராகம், செம்பருத்தி போன்ற சூப்பர்ஹிட் சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். 

நடிகை ஜனனிக்கு இன்ஸ்டாகிராமிலும் 1 மில்லியனுக்கு அதிகமான பாலோவர்கள் உள்ளனர். அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை அதில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஜனனி.

பெரும்பாலும் ஹோம்லி லுக்கில் போட்டோஷூட் நடத்தும் ஜனனி தற்போது திடீரென கவர்ச்சி ரூட்டுக்கு தாவி இருக்கிறார். படுக்கையறையில் படு கிளாமராக போஸ் கொடுத்தபடி இவர் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்.. மகனுக்கு காட்டப்போகும் முதல் படத்தை சொன்ன காஜல்... ப்ளீஸ் விவேகம் படத்த காட்டீராதிங்கனு நெட்டிசன்கள் கிண்டல்

click me!