இதில் அதிர்ச்சி தரும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கிய 24 மணி நேரத்தில் முதல் போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். பின்னர் ரகசிய அறை வழியாக அந்த போட்டியாளர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பரபரப்பாக நகர்ந்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விமர்சகருமான ரவீந்தர் சந்திரசேகர் முதல் போட்டியாளராக வெளியேறினார். இவர் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக களம் இறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து கடந்த வாரம் பிரபல சின்னத்திரை நடிகர் அர்னவ் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.