Bigg Boss : ஜாக்குலினுக்கு போடப்படும் கேட்; இரண்டாக உடையும் பெண்கள் அணி? காரணம் பவித்ராவா?

First Published Oct 8, 2024, 6:06 PM IST

Bigg Boss Tamil Season 8 : தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இப்பொது மீண்டும் துவங்கியுள்ளது. ஆரம்பமான முதல் நாளிலிருந்தே சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது BB வீடு.

Jacquline Bigg Boss

இதுவரை தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக மிக நேர்த்தியாக வழி நடத்தி வந்தார் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த சூழலில் தன்னுடைய திரைப்பட பணிகளுக்காக அவர் முழு வீச்சில் செயல்பட உள்ளதால், தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அதிலும் குறிப்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பங்கேற்ற முதல் நாளிலேயே, சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விலாசி, மிகச்சிறந்த நடுவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். 

உண்மையில் நெத்திப்போட்டில் அடித்தார் போல பேசும் விஜய் சேதுபதியின் கமெண்ட்ஸ், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது என்றே கூறலாம். கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 18 போட்டியாளர்களோடு கோலாகலமாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. பல புதிய முகங்களும், ஏற்கனவே மக்களுக்கு அறிமுகமான சில பழைய முகங்களும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றனர். மொத்தம் ஒன்பது ஆண்கள் ஒன்பது பெண்கள் என்று 18 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

சாச்சனாவை தொடர்ந்து பிக்பாஸில் அடுத்த எலிமினேஷன் - சிக்கியது யார்; யார் தெரியுமா?

Sachana

முதல் எலிமினேஷன் 

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்திலேயே பிரபல இளம் நடிகை சாச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இவர் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக வெளியான மகாராஜா திரைப்படத்தில், அவருடைய மகளாக நடித்து மிக சிறந்த பெயரை பெற்றார். இருப்பினும் முதல் நாளிலேயே சாஞ்சனா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிபதியை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. 

இது பிக் பாஸ் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய தலைவலியாகவும் இப்பொது மாறி இருக்கிறது. மேலும் பிற சீசன்களில் இல்லாத ஒரு புதிய விஷயமாக, ஆரம்பத்திலேயே ஆண்கள் ஒன்பது பேரும் பெண்கள் 9 பேரும் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு தற்பொழுது வீடு இரண்டாக்கப்பட்டு அவர்களுக்கு இடையே கொஞ்சம் சச்சரவுகளும் எழ துவங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்கள் அணி கொஞ்சம் கட்டுக்கோப்பாக இருந்தாலும், பெண்கள் அணிக்குள் விரிசல் ஏற்பட துவங்கியுள்ளது.

Latest Videos


Vijay sethupathi

முதல் நாளிலேயே ஒருவர் வெளியேறிய நிலையில் தற்பொழுது 8 பெண்கள் வெர்சஸ் 9 ஆண்கள் என்று பிக் பாஸ் வீடு பயணித்து வருகிறது. இந்த சூழலில் இன்று வெளியான ஒரு ப்ரோமோவில்.. பிக் பாஸ் ஒரு புதிய டாஸ்கை கொடுத்திருக்கிறார். அதன்படி பெண்களுக்காக விளையாட, அவர்களுடைய அணியில் இருந்து ஒருவரை ஆண்களுடைய பகுதிக்கும். அதே போல ஆண்களுக்காக விளையாட, பெண்களின் பகுதிக்கு ஒரு ஆணையும் அனுப்ப வேண்டும் என்று வித்தியாசமான மற்றும் விவகாரமான டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளார். 

இதில் ஆண்கள் எந்தவிதமான பிரச்சினையும் செய்து கொள்ளாமல் தங்களுக்குள்ளாக யாரை அனுப்ப வேண்டும் என்று விவாதிக்க, பெண்கள் அணிக்குள் இந்த விஷயத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜாக்குலின் மற்றும் பவித்ரா ஆகிய இருவரிடையே வார்த்தை போர் மூண்டுள்ளது.

Pavitra Janani

இதைத் தொடர்ந்து இந்த டாஸ்க் குறித்து வெளியான மற்றொரு புரோமோவில்.. ஆண்கள் அமைதியாக யாரை பெண்கள் அணிக்குள் அனுப்ப வேண்டும் என்று விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஜாக்குலின் தன்னை அந்த ஆண்களின் அணிக்குள் அனுப்ப மாட்டீர்கள் என்று தெரியும். காரணம் பவித்ரா அங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார் என்று ஆதங்கத்தோடு பேசுகிறார். உடனே அவரைக் குறிப்பிட்டு பேசும் பவித்ரா, நான் அங்கு சென்று நன்றாக விளையாடுவேன் என்று நினைத்தால் மட்டும் என்னை அனுப்புங்கள். தேவையில்லாமல் என்னை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று கூற, ஜாக்குலின் அந்த ஆண்கள் பகுதிக்கு செல்ல கூடாது என்று ஒட்டுமொத்த பெண்களும் போர் கோடி தூக்கியுள்ளனர். இதனால் ஜாக்குலின் இப்பொது பெண்கள் அணிக்குள்ளாகவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

தளபதியின் கணக்கு தப்பவில்லை; விஜய்க்கு அரைமனதோடு வைரமுத்து எழுதி மெகா ஹிட்டான பாடல் எது தெரியுமா?

click me!