பாரதிராஜாவை பாடகர் ஆக்கிய ஏ.ஆர்.ரகுமான்
பாரதிராஜா பாடிய பாடல் கருத்தம்மா படத்தில் இடம்பெற்றது. அப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற ‘காடு பொட்ட காடு’ என்கிற பாடலை தான் பாரதிராஜா பாடி இருந்தார். அப்பாடலில் ஆரம்பத்தில் வரும் சில வரிகளை மட்டும் பாரதிராஜா பாடி இருந்தார். மலேசியா வாசுதேவன் உடன் சேர்ந்து இப்பாடலை பாடி இருந்தார் பாரதிராஜா. மண்ணின் பெருமையும் பெண்ணின் பெருமையும் பேசும் இந்த பாடலுக்கு பாரதிராஜாவின் குரல் ஒரு பிளஸ் ஆக அமைந்திருந்தது. இந்த பாடலுக்கு பின் அவர் எந்த படத்திலும் பாடவில்லை.