தமிழ் திரையுலகை பொருத்தவரை மிகச் சிறந்த நடிகராக வலம் வந்தவர் சிவகுமார். இளம் வயது முதலிலேயே ஒழுக்கமான நடிகராகவும், மனிதராகவும் கலை உலகில் அவர் திகழ்ந்துவந்த நிலையில், அவரது இரண்டு மகன்களையும் அந்த வகையிலேயே வளர்த்தும் வந்தார். இன்றைய சூழலில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஒரு சிறு கெட்ட பழக்கம் கூட இல்லாமல் பயணித்து வரும் வெகு சில நடிகர்களில் சிவகுமாரின் இரண்டு மகன்களும் அடக்கம்.
தம்பி கார்த்திக்கு முன்பே அண்ணன் சூர்யா திரை உலகில் அறிமுகமானார். தொடக்க காலத்தில் அவருடைய மெச்சூரிட்டி இல்லாத நடிப்பு பெரிய அளவில் எடுபடவில்லை. ஒரு வசனத்தை தெளிவாக கூட பேச முடியாமல் இருந்த நடிகர் சூர்யா, அதன் பிறகு தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு வளர தொடங்கினார். அவர் நடிப்பில் வெளியான "நந்தா", "பேரழகன்", "கஜினி" "ஏழாம் அறிவு" என்று பல திரைப்படங்களில், அவரைத் தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்று நிரூபித்தார்.
அந்த வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு இயக்குனர் சசி சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "பேரழகன்" இரட்டை வேடங்களில் சூர்யா அசத்திய திரைப்படங்களில் இதுவும் ஒன்று. அதிலும் குறிப்பாக "சின்னா" என்ற கதாபாத்திரத்தில், கூன் விழுந்த தோற்றத்தில் நடித்து தனது அசாத்திய நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருப்பார்.
இந்திய சினிமாவின் பிரபல ஜோடிகள் இவர்கள்தான்! தலைசுற்றும் சொத்து மதிப்பு!