ஐடி ரெய்டில் சிக்கியுள்ள ஜி ஸ்கொயருக்கும், மாவீரன் படத்துக்கும் தொடர்பு இருப்பது தான் இந்த சிக்கலுக்கு காரணம். மாவீரன் படத்தை அருண் விஸ்வா என்பவர் தான் தயாரித்து வருகிறார். அவர் ஜி ஸ்கொயரில் பண உதவி பெற்று தான் மாவீரன் படத்தை தயாரித்து உள்ளாராம். தற்போது நடைபெற்று வரும் ஐடி ரெய்டில் இது தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் சிக்கினால், மாவீரன் படத்தின் மீதும் வருமான வரித்துறையினரின் பார்வை திரும்பும் சூழல் உருவாகி உள்ளது.
இதனால் மாவீரன் படத்துக்கு ஏதேனும் சிக்கல் வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் சிவகார்த்திகேயனும், படக்குழுவும் உள்ளார்களாம். ரிலீஸ் தேதி அறிவித்த உடன் மாவீரன் படத்துக்கு இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ரசிகர்களும் அப்செட் ஆகி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... குந்தவையின் கியூட்னஸை ரசிக்க 2 கண்கள் போதாது.! ரசிகர்களை பெருமூச்சு விடவைத்த த்ரிஷா.. PS2 ப்ரோமோஷன் போட்டோஸ்!