அனுஷ்காவுக்கு திருமணமாக வாய்ப்பே இல்ல ராஜா... பகீர் காரணத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்திய பயில்வான்

Published : Jul 07, 2023, 11:21 AM IST

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அனுஷ்காவுக்கு திருமணமாக வாய்ப்பே இல்லை என பயில்வான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
அனுஷ்காவுக்கு திருமணமாக வாய்ப்பே இல்ல ராஜா... பகீர் காரணத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்திய பயில்வான்
Anushka shetty

தெலுங்கு நடிகையான அனுஷ்காவை தமிழுக்கு அழைத்து வந்தது சுந்தர் சி தான். அவர் இயக்கத்தில் வெளிவந்த ரெண்டு திரைப்படத்தின் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த அனுஷ்காவுக்கு அப்படம் கைகொடுக்காததால், மீண்டும் டோலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இதையடுத்து கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்த அனுஷ்காவுக்கு விஜய் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

24
Anushka shetty

இதனால் கோலிவுட்டிலும் உச்சத்திற்கு சென்ற அனுஷ்காவுக்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ராஜமவுலி இயக்கிய இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தேவசேனா என்கிற கேரக்டரில் நடித்திருந்த அனுஷ்கா, தன்னுடைய அபார நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். பாகுபலிக்கு பின் அவர் நடிக்க கமிட் ஆன இஞ்சி இடுப்பழகி என்கிற திரைப்படம் அனுஷ்காவின் கெரியரை டோட்டலாக காலி செய்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்... வடிவேலு காமெடி தான்டா நல்லாருக்கு... அவன நடிக்க சொல்லுடா! பிரபலம் மூலம் வைகைபுயலுக்கு தூது அனுப்பிய விஜயகாந்த்

34
Anushka shetty

இப்படத்திற்காக உடல் எடையை கூட்டி குண்டான தோற்றத்துக்கு மாறிய அனுஷ்கா, பின்னர் உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். யோகா, உடற்பயிற்சி என எது செய்தாலும் அவரது உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதன் காரணமாக அனுஷ்காவுக்கு பட வாய்ப்புகளும் குறையத்தொடங்கின. தற்போது அவர் கைவசம் ஒரே ஒரு தெலுங்கு படம் மட்டுமே உள்ளது. அதிலும் இளம் நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார் அனுஷ்கா.

44
Bayilvan Ranganathan

தற்போது நடிகை அனுஷ்காவுக்கு வயது 40-ஐ கடந்துவிட்ட போதிலும் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். அதன்படி பிரபாஸ் அனுஷ்காவை பிரேக் அப் செய்து பிரிந்ததற்கு காரணம், அவர் தொழிலதிபர் ஒருவருடன் தொடர்பில் இருந்தது தான். பிரபாஸ் உடன் திருமணம் வரை சென்று பின் பிரிந்ததால் மன வருத்தத்தில் இருந்த அனுஷ்கா மேலும் உடல் எடை கூடினார். அவருக்கு உடல் எடை அதிகரித்ததாலும், அவர் 6 அடிக்கு மேல் இருப்பதாலும் தான் அவருக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை. தேவசேனாவாக அரியணை ஏறிய அனுஷ்காவுக்கு, இனி திருமண மேடை ஏறுவதற்கு வாய்ப்பில்லை” என்று கூறி இருக்கிறார் பயில்வான்.

இதையும் படியுங்கள்... நல்லா நடிச்சிருக்கனு பாராட்டுனாங்க; ஆனா வாய்ப்பு தரல! 1.5 வருஷம் சும்மா இருந்தேன்- ஆதங்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

Read more Photos on
click me!

Recommended Stories