இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தான் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் அதிகம் நடிப்பதற்கான காரணத்தை கூறினார். அதில் அவர் பேசியதாவது : “காக்கா முட்டை படத்திற்கு பின்னர் என்னை நிறைய பேர் அழைத்து பாராட்டினார்கள், ஆனால் யாரும் படங்களில் நடிக்க வாய்ப்பு தரவில்லை. தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, துல்கர் போன்ற நடிகர்கள் கூட பாராட்டினார்கள் ஆனால் அவர்களும் வாய்ப்பளிக்கவில்லை.