இவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்க, சமுத்திரக்கனி, ஜான் விஜய், மிஷ்கின், ராதா ரவி, ரித்தா, சிங்கம் புலி, சண்முகராஜன், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படத்தின் மூலம், அண்ணன் - தங்கை சென்டிமென்டை பாலா அழுத்தமாக கூறியிருக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், இயக்குனர் இந்த படத்தின் ஒன் லைன் குறித்து கூறியபோது, "ஒரு ரகசியம் வெளியே தெரிய வந்தால்10 பேருக்கு பிரச்சனை ஏற்படும். அந்த ரகசியம் மறைக்கப்பட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில், ஹீரோ எடுக்கும் முடிவே இந்த படம் கதை என்பது போல் தெரிவித்திருந்தார்.