அவ்வை சண்முகி திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் ரூ.1.5 கோடி சம்பளமாக கேட்டுள்ளார். அந்த காலகட்டத்தில் இது மிகப்பெரிய தொகை என்பதால், இதற்கு தயாரிப்பாளர் நோ சொல்லி உள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட கமல், அப்படி அந்த சம்பளத்தை தர முடியவில்லை என்றால் அவ்வை சண்முகி படத்தின் நான்கு ஏரியாக்களின் வெளியீட்டு உரிமையை தனக்கு வழங்குமாறு கேட்டிருக்கிறார். இதற்கு தயாரிப்பாளரும் ஓகே சொல்லி இருக்கிறார்.