தமிழ் சினிமாவில் பல்வேறு சவால்களை கடந்து இன்று முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர் அருண் விஜய். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'யானை', 'சினம்' போன்ற படங்கள் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் துவங்கியபோது, இதுகுறித்த புரோமோ ஒன்றை வெளியிட்டு இந்த படம் குறித்து அறிவித்திருந்தது படக்குழு. மேலும் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த பின்னர், சண்டை பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு, கட்டுடன் உடல் பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டார்.