வசமாக சிக்கிய மீராமிதுன்...பிடிவாரண்ட் கொடுத்த கோர்ட்

Published : Mar 23, 2022, 08:23 PM IST

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுனுக்கு எதிராக கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

PREV
18
வசமாக சிக்கிய மீராமிதுன்...பிடிவாரண்ட் கொடுத்த கோர்ட்
Meera mitun

பிக்பாஸில் சர்ச்சையை கிளப்பிய மீரா :

மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது பல குற்றசாட்டுகளை முன் வைத்திருந்தார். முன்னதாக அழகி போட்டி நடத்துவதாக நடத்துவதாக ஏமாற்றிய புகாரில் சிக்கி இருந்தார் மீரா மிதுன் . பின்னர் பிக் பாஸுக்குள் நுழைந்த இவர் அங்கு சேரன் மீது பாலியல் சீண்டல் குற்றசாட்டை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 

28
Meera mitun

கிளாமர் அலப்பறையில் மீரா :

வெளியில் வந்த பிறகு கிளாமர் ஆட்டம் போட துவங்கிய மீரா மிதுன் எக்கசக்க ஆட்டம் போட்டு விட்டார். அரை குறை ஆடையுடன் போட்டோக்களை வெளியிடுவதோடு. அண்ணா நண்பர்களுடன் எக்குத்தப்பாக போஸ் கொடுத்து கடுப்பேற்றி இருந்தார்.

38
Meera mitun

வாய் விட்டு மாட்டிக்கொண்ட மீரா மிதுன்:

வெறும் கவர்ச்சியோடு நிறுத்திக்கொள்ளாமல் தனது பாப்புலாரிட்டையை ஏற்ற எண்ணிய மீரா மீதும் கொஞ்சம் ஓவராக சென்று பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்து மோசமாக பேசி வீடியோ வெளியிட்டார். இதனால் தீயாய் சர்ச்சை வெடித்தது.
 

மேலும் செய்திகளுக்கு..MeeraMithun: விடாது கருப்பாய் மீரா மிதுனை துரத்தும் வழக்கு..! மீண்டும் கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன்..!
 

48
Meera mitun

மீரா மீது வழக்கு :

பட்டியல் இனத்தவர்கள் குறித்து பேசியதற்கு எதிராக சூப்பர்  மாடல் மீரா மீதும் அவரது ஆண் நண்பர் மீதும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதியப்பட்டது. இதற்கான சம்மனும் அனுப்பப்பட்டது. ஆனால்  ஆஜராகாமல் மீரா மிதுன் தலைமறைவானார்.  

58
Meera mitun

பிடிபட்ட மீரா மிதுன் :

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பதுங்கி இருந்தமீரா மற்றும் அவரது நண்பர் இருவரையும்  கடந்த ஆகஸ்ட் 14 ம் தேதி சுற்றிவளைத்த போலீசார் கைது செய்தது. பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் மீரா மிதுன் அடைக்கப்பட்டார். 

68
Meera mitun

ஜாமீனில் வெளிவந்த மீரா:

புழல் சிறையில் இருந்த மீரா மிதுன் பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். பின்னர் அவரது வழக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வந்தார். 

78
Meera mitun

பிடிவாரண்ட் பிறப்பித்த கோர்ட் :

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (23.3.2022) விசாரணைக்கு வந்தபோது  நடிகை மீரா மிதுன் ஆஜராகாததால் பிடிவாரண்ட்  பிறப்பித்து  மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

88
Meera mitun

விரைவில் ஆஜர் படுத்த உத்தரவு:

மேலும் நடிகை  மீரா மிதுனை கைது செய்து வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

click me!

Recommended Stories