காதலிக்க தொடங்கிய சில மாதங்களிலேயே அந்த நபரின் குடும்பத்தினருக்கு தன்னை அறிமுகப்படுத்தியதாகவும் அனுபமா தெரிவித்துள்ளார். அதன்பிறகு இரு குடும்பத்தினரும் சந்தித்துக் கொண்டதாகவும், திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் தொடர்பான பேச்சுகள் விரைவாகவே தொடங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, காதல் தொடங்கிய சுமார் மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தத்தை எங்கு நடத்துவது, எத்தனை பேர் கலந்து கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் வரை பேசப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த நிச்சயதார்த்தத்தை தான் பலமுறை தள்ளிப்போட்டதாகவும் அனுபமா கூறியுள்ளார். இது சரியான நேரம் இல்லை என்றும், இன்னும் சிறிது காலம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், இருவருக்கும் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க போதுமான வயதும் காலமும் இருப்பதாகவும் தொடர்ந்து தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பணத்திற்காக மட்டுமே அந்த உறவில் இருந்திருந்தால், நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதற்கான எந்த காரணமும் தனக்கு இருந்திருக்காது என்றும் அனுபமா வேதனையுடன் பேசியுள்ளார்.
அனுபமாவின் இந்த வெளிப்படையான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, அவரது பழைய பதிவும் தற்போது அவர் கூறியுள்ள தகவல்களும் இணைத்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.