ஆனால் அதே நேரத்தில் விக்ரமன் குறித்து ஆளூர் ஷாநிவாஸ் கூறிய போது' இந்த நிகழ்ச்சியை இதுவரை பார்த்ததில்லை, அவ்வப்போது வெளியாகும் கிளிப்பிங் மட்டுமே பார்ப்பேன், விக்ரமன் என்னுடைய கட்சிக்காரர், நல்லவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டரில், ‘ கையில் கிடைக்கும் ஒவ்வொன்றையும் கருவிகள் ஆக்குவோம், கடைசி மனிதனின் விடுதலைக்காக களத்தில் ஆடுவோம் என்ற தலைவர் திருமாவளவனின் வரிகளுக்கு ஏற்ப கிடைத்த வாய்ப்பில் கொள்கை உறுதியுடன் வெளிப்பட்ட தோழர் விக்ரமன் வெல்க’ என்று பதிவு செய்துள்ளார்.