இந்த ஆண்டின் துவக்கத்திலேயே புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது டிசம்பர் மாதம் 5ம் தேதி உலக அளவில் அந்த திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக தமிழில் இன்னும் எந்த திரைப்படத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்கவில்லை என்றாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.