நடிகை ஷாலினி தமிழில் கண்ணுக்குள் நிலவு, அலைப்பாயுதே, பிரியாத வரம் வேண்டும், அமர்க்களம், காதலுக்கு மரியாதை என மொத்தமே 5 படங்களில் தான் ஹீரோயினாக நடித்தார். அதன்பின்னர் சினிமாவை விட்டு விலகிய ஷாலினி மீண்டும் நடிக்க வரவே இல்லை. இருப்பினும் அவர் நடித்த படங்கள் அனைத்துமே காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. இவர் நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.