தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் நடிகர் அஜித் குமார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'தீனா' படத்திற்கு பின்னர், இவரை ரசிகர்கள் அன்போடு 'தல' என அழைக்க துவங்கினர். தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த போதே... ரசிகர்ளை அழைத்து, தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை கலைக்கும் படி அதிகார பூர்வமாக கோரிக்கை வைத்தார். அதே போல் தன்னுடைய படங்கள் வெளியாகும் சமயங்களில், பணத்தை கொட்டி, போஸ்டர் அடிப்பது, பேனர் வைப்பது, பட்டாசு கொளுத்தி, பாலபிஷேகம் செய்யும் செயல்களை கைவிடும் படி கேட்டுக்கொண்டார்.