அஜித்குமார் நெகிழ்ச்சி
அதோடு, இந்த தருணத்தில் தன்னுடைய தந்தை இருந்திருக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறி இருந்த அஜித், என்மீது அளவு கடந்த அன்பை பொழிந்து, பல தியாகங்களையும் செய்த எனது தாய்க்கு நன்றி என்றும் அஜித் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அதுமட்டுமின்றி 25 ஆண்டுகளாக எனக்கு துணையாக இருக்கும் என் மனைவி ஷாலினிக்கும் நன்றி, எனது மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமாக ஷாலினி திகழ்கிறார் என்றும் நடிகர் அஜித் அந்த அறிக்கையில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.