கோலிவுட் ரசிகர்களின் கனவு நாயகி சமந்தா
ரவி வர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவிரி, அதர்வா ஹீரோவாக அறிமுகமான பாணா காத்தாடி படங்களின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சமந்தா. அப்போதே சமந்தாவின் க்யூட்டான அழகில் மயங்கிய சினிமா ரசிகர்கள், நூல் அறுந்த பட்டமாய் தங்கள் மனங்களை தொலைத்தனர். ஜூனியர் என்.டி.ஆர் உடன் பிருந்தாவனம், மகேஷ் பாபு உடன் தூக்குடு, எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஈகா என தெலுங்கில் ஸ்டாராக ஜொலித்த சமந்தா, கெளதம் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் ஜீவாவின் காதல் கண்மணியாக நடித்து கோலிவுட் ரசிகர்களின் கனவு நாயகி ஆனார்.
இதையும் படியுங்கள்... கைவசம் 1500 கோடி பட்ஜெட் படங்கள்; மாஸ் கம்பேக் கொடுக்க ரெடியான மெர்சல் நாயகி சமந்தா!