தவெக-வினர் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்தது ஏன்?
தவெக கோவை மாநகர மாவட்டச் செயலாளர் சம்பத் உள்ளிட்ட சிலர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு விமான நிலைய சாலையில் வைக்கப்பட்டிருந்த, திமுக கொடிகளை சேதப்படுத்தியதாகவும் தவெகவினர் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.