நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகள் திருடுபோனதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த நகைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்றும் தன் வீட்டில் வேலை பார்த்த பணியாளர்கள் 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா புகாரில் தெரிவித்திருந்தார்.
24
அந்த நகைகள் தனது திருமணத்தின் போது வாங்கப்பட்ட நகைகள் என்றும், அதனை கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தனது தங்கையின் திருமணத்துக்கு போட்டுவிட்டு கழட்டிவைத்ததாகம். அதன்பின் கடந்த பிப்ரவரி மாதம் அந்த லாக்கரை ஓபன் பண்ணி பார்த்தபோது தான் நகைகள் திருடுபோனதை கண்டுபிடித்ததாகவும், மொத்தம் 60 சவரன் நகைகள் திருடு போய் உள்ளதாகவும் ஐஸ்வர்யா தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார், ஐஸ்வர்யாவின் வீட்டில் வேலை பார்த்த ஈஸ்வரி என்பவர் தான் நகையை திருடி உள்ளார் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் கார் டிரைவருக்கும் இதில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே அவர்களிடம் இருந்து 100 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 கோடி மதிப்பில் வீடு வாங்கியதற்கான சொத்து பத்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
44
இந்நிலையில், தற்போது கைதான ஈஸ்வரியிடம் இருந்து மேலும் 43 சவரன் நகைகளை மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஐஸ்வர்யா 60 சவரன் நகைகள் திருடுபோனதாக கூறிய நிலையில், ஈஸ்வரியிடம் இருந்து தற்போது 140 சவரனுக்கு மேல் நகைகள் மீட்கப்பட்டுள்ளதால் போலீசாரே குழம்பிப் போய் உள்ளார்களாம். இதுகுறித்து ஐஸ்வர்யாவிடமும் அவர்கள் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.