நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகள் திருடுபோனதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த நகைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்றும் தன் வீட்டில் வேலை பார்த்த பணியாளர்கள் 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா புகாரில் தெரிவித்திருந்தார்.