நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த இவருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்களும் உள்ளனர். தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்தாண்டு விவாகரத்து பெற்று பிரிந்ததை அடுத்து ஐஸ்வர்யா தனது மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் ஐஸ்வர்யாவின் வீட்டில் தங்க, வைர நகைகள் திருடு போய் உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.