தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஐஸ்வர்யா ராய். கடந்த 1994-ம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற இவர், 1997-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து ஷங்கரின் ஜீன்ஸ், ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்னம் இயக்கிய குரு என தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.