ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா பச்சன், தன்னைப் பற்றிய தவறான தகவல்களை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் முக்கிய விஷயத்தை வலியுறுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடியின் மகள் ஆராத்யா:
பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடியான, ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடியின் மகள் ஆராத்யா தன்னைப் பற்றியும், தன்னுடைய உடல்நலம் தொடர்பான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தாய் - தந்தையின் உதவியோடு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
25
வதந்திகள் பரப்பியதற்கு எதிராக வழக்கு:
இதுவரை நடிகர், நடிகைகள் இது போல் வழக்கு தொடர்வது தொடர்கதையாகி இருந்தாலும், நட்சத்திர ஜோடிகளின் மகள், இப்படி ஒரு வழக்கை தொடர்ந்ததால்... ஆராத்யாவின் இந்த செயலை பலர் மனதார பாராட்டி இருந்தனர். இந்த மனு தொடர்பாக, தவறான செய்தியை பரப்பிய கூகிள், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் இந்த வழக்கு மார்ச் 17 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அதே போல் பாலிவுட் டைம்ஸ், கூகிள் மற்றும் தொடர்புடைய பிற தரப்பினருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
45
ஆராத்யாவின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்து பரவிய வதந்தி:
முன்னதாக, ஆராதியாவின் உடல் மற்றும் மன நலம் குறித்து தவறான தகவல்களை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், சர்ச்சைக்குரிய யூடியூப் சேனல்களை முடக்கவும் கூகிளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட சேனல்களை இயக்குபவர்கள் குறித்த விவரங்களை வழங்குவதாக யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே போல் ஒரு குழந்தையின் உடல் அல்லது மன ஆரோக்கியம் பற்றிய வதந்திகளை பரப்புவது சட்டவிரோதமானது என்றும், பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் கண்ணியம் மற்றும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.