உலக அழகி பட்டம் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய், கடந்த 1997-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படம் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ், அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார் ஐஸ்வர்யா ராய்.
இவர் கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்த நடிகை ஐஸ்வர்யா ராய், இந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தினார். ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் தம்பதிக்கு ஆராத்யா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், தாம்பத்யம் குறித்த கேள்விக்கு அளித்துள்ள நச் பதில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது : “கணவன், மனைவி இருவருக்கும் உள்ளமும், உணர்ச்சியும் ஒறுசேர வரவேண்டும், அப்போதுதான் அது அவர்களுக்கு இன்பத்தையும், நிம்மதியையும் தரும். இல்லையெனில் அது காமத்துக்காக செய்யப்படும் ஒரு செயலாக மட்டுமே தோன்றும்.