பல வருடங்களாக சில முக்கிய பிரபலங்கள் எடுக்க முயற்சி செய்த நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை தற்போது, சில வருட போராட்டங்களுக்கு பின்னர் இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
அதே போல், நாவலை தழுவி எடுக்கப்பட்ட படங்களுக்கும், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. அந்த வகையில் தற்போது நம் தமிழகத்தை ஆண்ட, சோழ மன்னர்களின் வரலாற்று குறிப்புகளை கொண்டு, புனையப்பட்ட கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் காவியத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது தான் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம்.
'பொன்னியின் செல்வன்' முதல் பாகம், செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும்... படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய இடங்களை தொடர்ந்து இன்று மும்பையில் இந்த படத்தின் புரோமோஷன் பணி படு பிரமாண்டமாக நடந்தது.
இந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா ஆகியோர்... இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தோளில் கைபோட்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் படு வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக இப்படி நடிகைகளுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.