கண்விழித்த மறுகணமே ‘யாஷிகா’ கேட்ட ஒற்றை கேள்வி?... உண்மையை மறைத்த ஒட்டுமொத்த குடும்பம்... உருக்கமான காரணம்!

First Published Jul 27, 2021, 1:49 PM IST

யாஷிகாவின் உடல் நிலை  குறித்து அவருடைய தாயார் தெரிவித்த தகவல்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Yashika anand

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகையான யாஷிகா ஆனந்த் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் டாடா ஹேரியர் காரை படுவேகமாக ஓட்டியுள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி  அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதிய கார் விபத்துக்குள்ளானது. 

Yashika anand

பின் இருக்கையில் இருந்ததால் யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியதாக தெரிகிறது. விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தற்போது சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்

Yashika anand

பின் இருக்கையில் இருந்ததால் யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியதாக தெரிகிறது. விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தற்போது சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Yashika anand

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் மாமல்லபுரம் போலீசார் யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, அவருடைய டிரைவிங் லைசென்ஸையும் பறிமுதல் செய்துள்ளனர். உடல் நலம் தேறிய பிறகு யாஷிகா ஆனந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Yashika anand

இந்நிலையில் யாஷிகாவின் உடல் நிலை  குறித்து அவருடைய தாயார் தெரிவித்த தகவல்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யாஷிகாவிற்கு இடுப்பு, கால், வயிறு போன்ற பகுதிகளில் அடிபட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவித்தார். சிகிச்சை நல்லபடியாக முடிந்து 3 மாதம் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், 2 மாதங்கள் கழித்தே யாஷிகாவால் எழுந்து நடக்க முடியும் என்றும் கூறியுள்ளார். 

yashika

மேலும் மருத்துவமனையில் சுயநினைவு திரும்பியதும் ‘பவணி எப்படியிருக்கிறாள்?’ என தன்னுடைய தோழியைப் பற்றி விசாரித்ததாகவும், மருத்துவர்கள் தற்போது தோழியின் மரணம் குறித்து யாஷிகாவிற்கு தெரியப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியதால், பவணி வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியதாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்

click me!