நயன்தாரா போர் அடிச்சிடுச்சா?... அடுத்த படத்திற்கு பிரபல நடிகைக்கு தூது அனுப்பிய டாப் ஸ்டார்...!

First Published Feb 8, 2021, 7:24 PM IST

அதனால் இந்த படத்தில் முன்னணி நடிகை ஒருவரை சிரஞ்சீவிக்கு ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளாராம். 

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன்னுடைய ஆச்சார்யா படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்த படத்தின் ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
undefined
அடுத்ததாக மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அவதாரம் எடுத்த லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். மோகன் லால் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இந்த திரைப்படம், மலையாள திரையுலகிலேயே 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை நிகழ்த்தியது.
undefined
இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ரசிகர்களை குஷியாக்குவதற்காக எக்ஸ்ட்ரா காதல் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளை சேர்க்க உள்ளாராம் இயக்குநர் மோகன் ராஜா. அதனால் இந்த படத்தில் முன்னணி நடிகை ஒருவரை சிரஞ்சீவிக்கு ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளாராம்.
undefined
இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேசி வருகிறார்களாம். கிட்டதட்ட 15 வருடங்களுக்குப் பிறகு இருவரும் ஒன்றாக நடிக்க உள்ளனர். இடையில் ஆச்சார்யா படத்தில் ஹீரோயினாக கமிட்டான த்ரிஷா அதிலிருந்து பாதியில் விலகினார். தற்போது மீண்டும் இருவரையும் இணைக்கும் முயற்சி நடத்து வருகிறது.
undefined
மற்றொருபுறம் தமன்னாவிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளியான சாயிரா நரசிம்மா ரெட்டி படத்தில் தமன்னாவும், நயன்தாராவும் நடித்திருந்தனர்.
undefined
மீண்டும் நயனுடன் ஜோடி சேர்ந்து சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஜோடியை மீண்டும் திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் நயனை விட்டு விட்டு தமன்னா, த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவது ரசிகர்கள் மத்தியில் சற்றே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
undefined
click me!