படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டாரா அனுஷ்கா?... மோசமான அனுபவம் குறித்து அவரே பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

First Published Feb 8, 2021, 6:17 PM IST

தென்னிந்திய திரையுலகில் டாப் ஹீரோயினாக இருந்தாலும் அனுஷ்காவும் படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் தொல்லையை அனுபவித்துள்ளதாக மனம் திறந்து பேசியுள்ளார். 

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலமாக ஓட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தவர். அருந்ததி, ருத்ரமா தேவி படங்கள் மூலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் ஜொலித்தவர்.
undefined
விஜய், சூர்யா, அஜித், விக்ரம், மாதவன் என முன்னணி நடிகர்கள் பலருடன் போட்டி போட்டு நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். தெலுங்கு ரசிகர்கள் அனுஷ்காவை செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கிறார்கள்.
undefined
தென்னிந்திய திரையுலகில் டாப் ஹீரோயினாக இருந்தாலும் அனுஷ்காவும் படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் தொல்லையை அனுபவித்துள்ளதாக மனம் திறந்து பேசியுள்ளார். ஹாலிவுட் டூ கோலிவுட் வரை நடிகைகள் ஓபனாக பேசிய மீடூ விவகாரம் குறித்து அனுஷ்கா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
undefined
திரைத்துறை கவனம் ஈர்ப்பது என்பதால் இங்கு நடக்கும் விஷயங்கள் பெரிதாக தெரிகிறது. எல்லா துறைகளிலும் பாலியல் தொல்லை உள்ளது. நானும் சினிமாவிற்கு வந்த புதிதில் இந்த பிரச்சனைகளை அனுபவித்துள்ளேன். ஆனால் பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாதபோது நிர்பந்திப்பது தவறு. தவறான எண்ணத்துடன் நெருங்கும் ஆண்களிடம் முடியாது என மறுத்துவிட்டால் அவர்கள் தங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
undefined
click me!