இந்த சூழலில் நடிகை சிம்ரன் தனது கணவர் தயாரிப்பாளராக களமிறங்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இதுகுறித்து வலைப்பேச்சு youtube சேனலில் ஒரு சர்ச்சை கருத்தும் வெளியிடப்பட்டது. அதாவது தன்னுடைய கணவர் தயாரிக்கும் திரைப்படத்தில், நடிகர் விஜய் நடிக்க சிம்ரன் அவரை அணுகியதாகவும். ஆனால் உங்களுக்கு ஏன் இந்த தயாரிப்பு வேலையெல்லாம் என்று விஜய் அவருக்கு அறிவுரை கூறியதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து மிகவும் காட்டமான ஒரு பதிவை வெளியிட்டுள்ள சிம்ரன் "இப்படிப்பட்ட விஷயங்களை எப்படி பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் ஒரு நாயகியாக என்ன சாதிக்க வேண்டுமோ அவை அனைத்தையும் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு சாதித்து விட்டேன். இப்போது என்னுடைய இலக்கே வேறு, என் குடும்பம் என் வாழ்க்கை என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் நான் வாழ்ந்து வருகிறேன். இனி என்னைப் பற்றி இப்படி அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"அம்மா இயற்கை எய்தினார்".. பிரபல நடிகையின் மறைவு - வீடியோ வெளியிட்டு வருந்திய கமல்ஹாசன்!