பளபளக்கும் பட்டு புடவையில்... கண்ணை கவரும் அழகில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் வெளியிட்ட புகைப்படங்கள்..!
First Published Nov 19, 2019, 12:26 PM ISTஇயக்குனர் மணிரத்னம் இயக்கிய "காற்றுவெளியிடை" படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
'காற்று வெளியிடை' படத்தை தொடர்ந்து, 'இவன் தந்திரன்', 'விக்ரம் வேதா', 'நேர்கொண்ட பார்வை' என பல வெற்றி படங்களில் நடித்து முடித்துவிட்டார். தற்போது இவரின் கைவசம் தமிழில் 'சக்ரா', 'மாறா' என இரு படங்கள் உள்ளன.
இந்நிலையில் இவர், தற்போது பளபளக்கும் சிவப்பு நிற புடவையில் கண்ணை கவரும் விதத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...