தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ஆர்.கே.செல்வமணி. நடிகை ரோஜாவின் கணவரான இவர் தற்போது இயக்குனர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்படம் தொழிலாளர்கள் சம்மேளனமான ஃபெப்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். வேலை நிமித்தமாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள கண்ணம்மாள் தெருவுக்கு சென்ற செல்வமணி, அங்கு தனது இன்னோவா காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த இடத்துக்கு நடந்து சென்றுள்ளார்.