ஆண்களை நாய்களோடு ஒப்பிட்டு வில்லங்கத்தில் சிக்கிய ‘குத்து’ ரம்யா... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

Published : Jan 09, 2026, 01:57 PM IST

நடிகை ரம்யா ஆண்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் வைரலாகி வருகின்றன. இந்தக் கருத்துகள் மீது நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவி உள்ளது.

PREV
14
Actress Ramya Comparing Men to Dogs

நடிகை ரம்யா ஆண்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் சமூக ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளன. கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து நல்ல அங்கீகாரம் பெற்ற ரம்யா, சமீபத்தில் தெருநாய் விவகாரத்தில் சமூக ஊடகப் பதிவை வெளியிட்டிருந்தார். தெருநாய்களால் அதிகரித்து வரும் தாக்குதல்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளின் பின்னணியில், விலங்கு கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி அமலாக்கம் தொடர்பான விஷயங்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. அப்போது, நாய்கள் எப்போது எப்படி நடந்துகொள்ளும் என்று சொல்ல முடியாது, விலங்குகளின் மனநிலையை கணிப்பது கடினம் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. சில சமயங்களில் நாய்கள் மனிதர்களின் பயத்தை உணர்ந்து தாக்கக்கூடும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

24
ஆண்களை நாய்களுடன் ஒப்பிட்ட நடிகை

உச்சநீதிமன்றத்தின் கருத்துகளுக்கு பதிலளித்த நடிகை ரம்யா, சோசியல் மீடியா மூலம் தனது கருத்தைத் தெரிவித்தார். அதில், நாய்களின் நடத்தையை மனிதர்களின் குற்றச் செயல்களுடன் ஒப்பிட்டுள்ளார். "ஒரு ஆண் எப்போது பாலியல் வன்கொடுமை அல்லது கொலை செய்வான் என்பதை முன்கூட்டியே அறிய முடியாது என்பதால், எல்லா ஆண்களையும் சிறையில் அடைக்க வேண்டுமா?" என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். நாய்கள் தொடர்பான விஷயத்தை ஆண்களுடன் முடிச்சுப்போட்டு அவர் தெரிவித்த கருத்துகள் புயலைக் கிளப்பியுள்ளன. சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

34
ரம்யா மீது கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பல நெட்டிசன்கள் இந்த ஒப்பீடு சரியல்ல என்றும், ஒரு பிரிவினர் அனைவரையும் இப்படிச் சொல்வது தவறு என்றும் விமர்சித்து வருகின்றனர். மறுபுறம், சிலர் அவரது கருத்துகளுக்குப் பின்னால் வேறு நோக்கம் இருப்பதாகவும், அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ரம்யாவுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். ஆனால் ரம்யாவின் கருத்துகளுக்கு பெரும்பாலும் எதிர்மறையான கருத்துக்களே வருகின்றன. ரம்யா இதுபோன்று கருத்து தெரிவிப்பது புதிதல்ல. இவர் இதற்கு முன்னரும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி ரகளையில் ஈடுபட்ட சம்பவங்கள் உள்ளன. இந்த விஷயத்தை நெட்டிசன்களும் நினைவுபடுத்துகின்றனர்.

44
யார் இந்த ரம்யா?

கன்னடம் மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் ரம்யா. குறிப்பாக சிம்புவுக்கு ஜோடியாக குத்து, சூர்யா உடன் 'வாரணம் ஆயிரம்', தனுஷின் பொல்லாதவன் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். திரைப்படங்களுக்குப் பிறகு அரசியலில் நுழைந்த அவர், சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கிறார். சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தி அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது தெருநாய்களின் நடத்தையை ஆண்களின் நடத்தையுடன் ஒப்பிட்டு நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories