RaashiKhanna: வேற லெவல் நீங்க... ராஷி கண்ணா பிறந்தநாளில் செய்த செயலால் ஆச்சர்யத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

First Published Dec 1, 2021, 10:37 AM IST

நடிகை ராஷி கண்ணா (RaashiKhanna) நேற்று தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, செடிகள் நட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு, அவரது ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

பிறந்தநாள் என்றாலே அனைவருக்கும் செம்ம கொண்டாட்டம் தான், அதிலும் பிரபலங்கள் என்றால் சொல்லவே வேண்டாம் அன்றைய நாளை வேற லெவலுக்கு கொண்டாடி மகிழ்வார்கள்.

அந்த வகையில் தான் நேற்று நடிகை ராஷி கண்ணா தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை குடும்பத்தினர், நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

குறிப்பாக இந்த பிறந்தநாளை மேலும் சிறப்பிக்கும் விதமாக இவர் செய்துள்ள சூப்பர் செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

அதாவது, தன்னுடைய பிறந்த நாளில் கிரீன் இந்தியாவை கொண்டாடும் விதமாக செடிகள் நட்டு கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்களை அவர் வெளியிட ரசிகர்கள் அவருக்கு ஆச்சர்யத்துடன் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு இதுபோன்ற நல்ல செயல்களை தொடர்ந்து செய்யவேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்கள்.

கடைசியாக நடிகை ராஷி கண்ணா நடிப்பில் 'அரண்மனை' படம் வெளியானது இதில், 1 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதையே தன்னுடைய வாழ்நாள் ஆசையாக வைத்திருந்த விவேக் நடித்திருந்தார்.

அவருடன் நடித்த நடிகை என்பதை இந்த ஒரு செயல் மூலம் நிரூபித்துள்ளார் ராஷி. இவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள் மட்டும் இன்றி , ரகுல் ப்ரீத் சிங் , விஜய் சேதுபதி, கீர்த்தி சுரேஷ் உள்ள பல பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!