அதேபோல் நயன்தாராவை வீடியோ எடுக்க செய்தியாளர்களும் அங்கு வந்திருந்தனர். இதையடுத்து அங்கு போலீசார் வந்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் விக்னேஷ் சிவன் அங்கிருந்தவர்களிடம் சிறிது நேரம் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் நயன்தாராவும் வந்து, ப்ளீஸ் தயவு செஞ்சு சாமி கும்பிட விடுங்க என வேண்டுகோள் விடுத்தார். அதன்பின் இருவரும் சாமிதரிசனம் செய்தனர்.