Namitha controversy : தாலி, பொட்டு, விரதம் போன்ற சம்பிரதாயங்கள் பெண்களுக்கு மட்டும் ஏன் என நடிகை நமிதா கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது.
நடிகை நமிதா சமீபத்தில் ஒரு பேட்டியில், இந்திய திருமண சம்பிரதாயங்கள் மற்றும் சமூகத்தில் இருக்கும் சில பழக்கவழக்கங்கள் குறித்து சில சுவாரஸ்யமான கருத்துக்களைப் பேசியுள்ளார். தாலி அணிவது, பொட்டு வைப்பது, கணவரின் நலனுக்காக வரலட்சுமி விரதம் இருப்பது என எல்லாமே பெண்கள் மட்டும் ஏன் செய்ய வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மனைவிக்காக கணவர்கள் எப்போதாவது விரதம் இருக்கிறார்களா என்று கேட்ட நமிதா, இந்த விதிகள் எல்லாம் சமூகத்தால் உருவாக்கப்பட்டவைதான், எந்த மத நூல்களிலும் இப்படி குறிப்பிடப்படவில்லை என்றும் கூறியுள்ளார். நமிதாவின் இந்த கருத்துக்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் ரசிகர்களுக்கு நமிதா மிகவும் பரிச்சயமான முகம். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். கடந்த ஆறு ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நமிதா, சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய திருமண முறை மற்றும் பெண்கள் மீது சமூகம் சுமத்தியுள்ள சில பொறுப்புகள் குறித்து பேசியுள்ளார்.
ஆண்களுக்கு இல்லாத சில விதிகள் பெண்களுக்கு மட்டும் ஏன் இருக்கிறது என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். கணவரின் நீண்ட ஆயுளுக்காக பெண்கள் வரலட்சுமி விரதம் போன்றவற்றை கடைப்பிடிப்பது குறித்தும் நமிதா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். "பெண்கள் ஏன் தாலி அணிய வேண்டும்? பெண்கள் தான் பொட்டு வைக்க வேண்டும், சம்பிரதாயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள்? ஆண்களுக்கு இல்லாத இந்த விதிகள் எல்லாம் பெண்களுக்கு மட்டும் ஏன்?" என்று அவர் கேட்டுள்ளார்.
34
எல்லா விதிகளும் பெண்களுக்கு மட்டும்தானா?
"என் கணவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் விரதம் இருக்கிறேன். ஆனால், மனைவியின் நலனுக்காக கணவர் வருடத்தில் ஒரு நாளாவது விரதம் இருக்க வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா? அப்படி எதுவும் இல்லை. சமூகம் ஏன் அப்படி ஒரு விதியை உருவாக்கவில்லை? எல்லா விதிகளும் பெண்களுக்கு மட்டும்தானா? இவையெல்லாம் சமூகத்தால் உருவாக்கப்பட்ட விதிகள். எந்த நூலிலும் இப்படிப்பட்ட விதிகள் இல்லை," என்று நமிதா கருத்து தெரிவித்துள்ளார்.
நமிதாவின் இந்த கமெண்ட்டுகள் இப்போது சோஷியல் மீடியாவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சிலர் அவரது கேள்விகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சிலரோ இந்திய மரபுகள் குறித்துப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
'ஏய்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான நமிதா, பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் நமிதாவுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. 2017-ல் தொழிலதிபர் வீரேந்திர சௌத்ரியை நமிதா திருமணம் செய்து கொண்டார். தனது 41வது பிறந்தநாளில், தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமூக வலைதளம் மூலம் அறிவித்தார். 2022 ஆகஸ்ட் மாதம், நமிதா இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார்.
2020-ல் வெளியான 'மியா' என்ற தமிழ்ப் படம்தான் நமிதா நடித்த கடைசிப் படம். இப்போது அவர் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்க தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. சமீப காலமாக உடற்பயிற்சி மூலம் உடல் எடையை கணிசமாகக் குறைத்துள்ள நமிதா, இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.